வெளிநாட்டிலிருந்து பெங்களூரு திரும்பிய ரேவண்ணா விமான நிலையத்தில் கைது
பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கர்நாடக எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிலிருந்து பெங்களூரு திரும்பினார்.
பாலியல் வழக்கில் சிக்கியதால் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, இன்று (மே 31) அதிகாலை பெங்களூரு வந்தடைந்துள்ளார்.
ரேவண்ணா வருகையையொட்டி பெங்களூரு விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதையடுத்து பெங்களூரு வந்தடைந்த ரேவண்ணாவை, பெங்களூரு கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து காவல்துறையின் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
Advertisement
Advertisement
பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ரேவண்ணாவிடம் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்தி, அவற்றை காணொலியாகப் பதிவு செய்திருப்பதாக எழுந்த புகாரை தொடா்ந்து, எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும், எம்எல்ஏவுமான எச்.டி.ரேவண்ணா ஆகியோா் மீது ஏப். 27-ஆம் தேதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அதைத் தொடா்ந்து, எஸ்.ஐ.டி. தனது விசாரணையைத் தொடங்கியது. இந்த நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்துவதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி) கா்நாடக அரசு அமைத்தது. அதைத் தொடா்ந்து, எஸ்.ஐ.டி. தனது விசாரணையைத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, பாலியல் வழக்கு விசாரணைக்காக அவர் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.