பிரதமர் மோடி.(கோப்புப்படம்)  
இந்தியா

சுரங்க விபத்து: ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தெலங்கானா சுரங்க விபத்தில் மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

DIN

தெலங்கானா சுரங்க விபத்தில் மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட்டுமானப் பணியிலிருந்த சுரங்கப்பாதை இடிந்து விபத்தானது. இந்த விபத்தின்போது, சுரங்கத்தினுள் 50 பேர் வரையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்களில் 43 பேர் வெளியே மீட்கப்பட்டாலும், 7 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று கூறுகின்றனர். சுரங்கப்பாதை 10 மீட்டருக்குமேல் இடிந்து விழுந்துள்ளதாகவும், 200 மீட்டருக்குமேல் சேறு பரவியுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுரங்கத்தின் மேல்புறம் 3 மீட்டர் தொலைவுக்கு திடீரென இடிந்து விழுந்ததில், உள்ளிருந்தவர்கள் தப்பித்து வெளிவந்தனர். இருப்பினும், சுரங்கத்தின் மற்றொரு பகுதியில் இருந்தவர்கள் துரதிர்ஷ்டவசமாக உள்ளேயே சிக்கிக் கொண்டனர். உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், " சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள பணியாளர்களை மீட்பது குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசித்தார்.

அப்போது மீட்புப் பணிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதியளித்தார் என்றார். இதனிடையே சுரங்க விபத்தில் எட்டு பேர் உள்ளே சிக்கியுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி: இந்தியா - பாகிஸ்தான் "டிரா'

இலங்கை 258/6: நியூஸிலாந்து இன்னிங்ஸில் "மழை'

ஜூனியர் பாட்மின்டன்: தன்வி வெற்றி

முதல் நாளில் ஏமாற்றம்

SCROLL FOR NEXT