இந்தியா

ஹஜ் பயணிகளை ஏற்றி வந்த சௌதியா ஏர்லைன்ஸில் கரும்புகை!

கரும்புகை கண்டறியப்பட்டதையடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டனர்

DIN

ஹஜ் பயணிகளை லக்னௌவிற்கு அழைத்து வந்த விமானத்தில் கரும்புகை கண்டறியப்பட்டதையடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டனர்

242 ஹஜ் பயணிகளை ஏற்றிச் சென்ற சௌதியா ஏர்லைன்ஸ் ஜெட்டா-லக்னௌ விமானம் தரையிறங்கும் போது விமானத்தின் சக்கரங்களிலிருந்து கரும்புகை வெளியேறியதை அடுத்து விமான நிலையத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை நகரின் சௌத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்றது. மேலும் விமானத்தில் இருந்த 242 பயணிகளும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். விமானத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ஜெட்டாவிலிருந்து 242 ஹஜ் பயணிகளை அழைத்துவந்த சௌதியா விமானத்தின் சக்கரங்களிலிருந்து கரும்புகை வெளியேறியது கண்டறியப்பட்டதையடுத்து, விமான மீட்பு மற்றும் தீயணைப்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. சௌதியா குழுவுடன் இணைந்து பணியாற்றி, கரும்புகை கட்டுப்படுத்தப்பட்டது மற்றும் விமானத்திற்கு ஏற்பட்ட சேதம் தவிர்க்கப்பட்டது.

விமான நிலைய நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சௌதியா விமானம் சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று அதன் இலக்கை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT