கர்நாடகம்: மனைவி உள்பட 4 பேரை குத்திக் கொன்ற நபரால் பரபரப்பு
கர்நாடகத்தில் மனைவி உள்பட 4 பேரை குத்திக் கொன்ற நபரால் பரபரப்பு நிலவியது.
கர்நாடகத்தில் மனைவி உள்பட 4 பேரை குத்திக் கொன்ற நபரால் பரபரப்பு நிலவியது.
கர்நாடக மாநிலம், பொன்னம்பேட்டை வட்டத்தில் உள்ள பேகுரு கிராமத்தில் கிரிஷ் (35) என்பவர் தனது மனைவி நாகி (30), அவரது ஐந்து வயது மகள் மற்றும் மாமனார் கரியா (75), மாமியார் கௌரி (70) ஆகியோரை வெள்ளிக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
பின்னர் கிரிஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். குற்றவாளியைப் பிடிக்க போலீஸார், சிறப்புக் குழுக்கள் அமைத்துள்ளனர்.
Advertisement
Advertisement
இருப்பினும் இந்த கொலைகளுக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. கிரிஷ் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நாகியை மணந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட காவல் கண்காணிப்பாளர் கே.ராமராஜன், குற்றவாளியை விரைவில் பிடிக்க சிறப்புக் குழுக்களுக்கு உத்தரவிட்டார்.
சிக்ஸர் அடிக்க திட்டமிடுவது கிடையாது; அதிரடியில் மிரட்டிய நிக்கோலஸ் பூரன்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.