ஜம்முவில் மீண்டும் ட்ரோன் தாக்குதல்: நடுவானில் தாக்கி அழித்த இந்திய ராணுவம்!
ஜம்முவில் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் நடுவானில் தாக்கி அழித்தது இந்திய ராணுவம்.
ஜம்முவில் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில் நடுவானிலேயே இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதனால், ஜம்மு - காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டு அனைவரும் உஷார் நிலையில் உள்ளனர்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதன் விளைவாக ஜம்மு - காஷ்மீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் அக்னூர் பகுதியில் பலத்த சத்தம் கேட்டதாகவும் இதனால், பொதுமக்களுக்கு சைரன் சத்தம் எழுப்பி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு பல்கலைக்கழகத்தின் அருகில் 2 ட்ரோன்களை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதான்கோட் விமானப்படை தளத்தில் வானில் இடைமறித்து ட்ரோன்கள் தகர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.