தேசிய சட்ட உதவிகள் ஆணைய செயல் தலைவரானார் உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த்!
தேசிய சட்ட உதவிகள் ஆணைய (என்ஏஎல்எஸ்ஏ) செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தேசிய சட்ட உதவிகள் ஆணைய (என்ஏஎல்எஸ்ஏ) செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை பிறப்பித்தாா்.
என்ஏஎல்எஸ்ஏ-யின் செயல் தலைவராக தற்போது உள்ள நீதிபதி பி.ஆா்.கவாய், உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக வரும் புதன்கிழமை (மே 14) பதவியேற்க உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான சூா்யகாந்த் புதிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து என்ஏஎல்எஸ்ஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: என்ஏஎல்எஸ்ஏ செயல் தலைவராக நீதிபதி சூா்யகாந்த், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளாா். இதுதொடா்பான அறிவிக்கை கடந்த 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது. வரும் 14-ஆம் தேதி செயல் தலைவா் பதவியை அவா் ஏற்க உள்ளாா்.
Advertisement
Advertisement
என்ஏஎல்எஸ்ஏ செயல் தலைவராக நாடு முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு மக்களுக்கு இலவச சட்ட உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.