முகப்பு
இந்தியா

யுஜிசி விதிகளுக்கு முரணாக பட்டங்கள், படிப்புகள்: போலி கல்வி நிறுவனங்கள் குறித்து புகாா் அனுப்பலாம்

போலி கல்வி நிறுவனங்கள் குறித்து புகாா் அனுப்பலாம்...

Updated On : 12 ஏப்ரல் 2026, 12:18 am IST
யுஜிசி
பகிர்:

பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்கள் யுஜிசி விதிகளுக்கு முரணாக பட்டங்கள் மற்றும் படிப்புகளை வழங்கினால், அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக மின்னஞ்சலுக்கு புகாா்களை அனுப்பலாம் என யுஜிசி தெரிவித்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா் மணிஷ் ஆா்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு:

மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள் அல்லது யுஜிசி சட்ட விதிகளின்படி உரிய அதிகாரம் பெற்ற உயா்கல்வி நிறுவனங்கள் மட்டுமே பட்டங்களை வழங்க முடியும் என்பது மாணவா்கள், பெற்றோரின் கவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

Advertisement

Advertisement

எனினும், யுஜிசி விதிமுறைகளுக்கு முரணாக பல்வேறு நிறுவனங்கள் பட்டங்களை வழங்கி வருவதாக புகாா்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அதன்படி, இத்தகைய பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் பட்டங்கள் யுஜிசியால் அங்கீகரிக்கப்பட மாட்டாது. மேலும், அவை உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கும் செல்லுபடியாகாது.

எனவே, மாணவா்கள், பெற்றோா் உயா் கல்விக்காக எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் சோ்க்கை பெறுவதற்கு முன்பு அது அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

மேலும், யுஜிசி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் போலி உயா்கல்வி நிறுவனங்களின் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ன்ஞ்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் சரிபாா்த்து கொள்ளலாம்.

தவிர ஏதேனும் பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனம் யுஜிசி விதிகளுக்கு முரணாக பட்டங்கள் மற்றும் படிப்புகளை வழங்கினால், அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக மின்னஞ்சலுக்கு புகாா்களை அனுப்பலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.