முகப்பு
இந்தியா

எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க தயார்; நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா? அமித் ஷா சவால்

எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க நான் தயார்; நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா? என்ற அமித் ஷா சவால் விடுத்துள்ளார்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 7:06 PM
அமித் ஷா - PTI
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 7:01 PM

தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு அநீதி ஏற்படாது என நான் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கத் தயார், மசோதாவை நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா என்று எதிர்க்கட்சியினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சவால் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவிகிதம் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று உறுதியளித்துள்ளார்.

தொகுதி மறுவரையறைக்குப் பிறகு, தமிழகத்தின் மொத்த மக்களவைத் தொகுதிகளில் 20 இடங்கள் மகளிருக்கானதாக இருக்கும். தென் மாநிலங்களுக்கான பங்கீடு குறையாது என நான் உறுதியளிக்கிறேன். உங்களால் இந்த மசோதா தோற்கடிக்கப்படலாம். ஆனால், அதனை மகளிர் மன்னிக்க மாட்டார்கள். ஒட்டுமொத்த எண்ணிக்கையில் தென்னிந்திய மாநிலங்களுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை சதவிகிதம் குறையாது. தென்னிந்திய மாநிலங்களுக்கு அநீதி ஏற்படாது என கையெழுத்திட்டு தருகிறேன்.

Advertisement

தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறும்.

எனவே,தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க நான் தயாராக இருக்கிறேன், இன்ற இந்த மசோதாவை நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த மசோதா தோல்வியடையலாம்; பெண்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அமித் ஷா பேசினார்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது சாதிப் பட்டியலைத் தாமதப்படுத்தும் நோக்கில் மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளை அமித் ஷா நிராகரித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.