ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!
ஹோர்முஸ் நீரிணையில் திருப்பி அனுப்பப்பட்ட இந்தியக் கப்பல்கள்...
ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்துள்ள புகாரையடுத்து, இவ்விவகாரத்தில் ஈரான் தூதருக்கு சம்மன் அனுப்பப்படவிருப்பதாக வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்காகத் திறக்கப்படுவதாக அறிவித்த ஈரான், அமெரிக்க கடற்படையால் ஈரானிய துறைமுகங்கள் முற்றுகையிடப்படும் நடவடிக்கைக்கு எதிர்வினையாக ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு மீண்டும் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் உலகளாவிய சரக்கு போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
இதனிடையே, இராக்கிலிருந்து 20 லட்சம் பாரல் எண்ணெயுடன் ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தில் தாயகம் திரும்பிக்கொண்டிருந்த இரு இந்திய சரக்கு கப்பல்களைக் குறிவைத்து ஈரானிய புரட்சிகர காவல்படை தாக்குதல் நடத்தியிருப்பதாக கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் முகமை ஒன்று உறுதிப்படுத்தியது. தாக்குதல் எதிரொலியாக அவ்விரு இந்தியக் கப்பல்களும் திருப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
இதையடுத்து, இவ்விவகாரத்தில் விளக்கம் கேட்டு ஈரான் தூதருக்கு சம்மன் அனுப்பப்படவிருப்பதாக வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.