சத்தீஸ்கரில் தனியார் விமானம் விபத்து!
சத்தீஸ்கரில் தனியார் விமான விபத்துக்குள்ளானது பற்றி...
சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூரில் தனியார் விமானம் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.
முதல்கட்டத் தகவலின்படி, ஜஷ்பூர் மாவட்டத்தில் உள்ள குரசாகர்கா கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள ரத்தன்பஹ்லி வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அந்த விமானம் தரையிலிருந்து சுமார் 30 அடி உயரத்தில், மிகத் தாழ்வாகப் பறந்துகொண்டிருந்ததும், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதும் இணையத்தில் பகிரப்படும் விடியோவில் பதிவாகியுள்ளது.
Advertisement
Advertisement
இது சிறிய ரகத் தனியார் விமானம் என்பது மட்டும் தற்போது தெரியவந்துள்ளது. மற்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விபத்து நடந்த இடத்தில் கரும்புகை கிளம்பியிருக்கும் நிலையில், உயிரிழப்புகள் இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும், விபத்து நடந்த இடத்துக்கு மீட்புக் குழுவினரும் மாவட்ட நிர்வாகத்தினரும் விரைந்து அனுப்பப்பட்டுள்ளனர்.
Private Plane Crashes in Chhattisgarh!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.