சத்தீஸ்கரில் தனியார் விமானம் விபத்து!
சத்தீஸ்கரில் தனியார் விமான விபத்துக்குள்ளானது பற்றி...
சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூரில் தனியார் விமானம் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.
முதல்கட்டத் தகவலின்படி, ஜஷ்பூர் மாவட்டத்தில் உள்ள குரசாகர்கா கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள ரத்தன்பஹ்லி வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அந்த விமானம் தரையிலிருந்து சுமார் 30 அடி உயரத்தில், மிகத் தாழ்வாகப் பறந்துகொண்டிருந்ததும், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதும் இணையத்தில் பகிரப்படும் விடியோவில் பதிவாகியுள்ளது.
Advertisement
இது சிறிய ரகத் தனியார் விமானம் என்பது மட்டும் தற்போது தெரியவந்துள்ளது. மற்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விபத்து நடந்த இடத்தில் கரும்புகை கிளம்பியிருக்கும் நிலையில், உயிரிழப்புகள் இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும், விபத்து நடந்த இடத்துக்கு மீட்புக் குழுவினரும் மாவட்ட நிர்வாகத்தினரும் விரைந்து அனுப்பப்பட்டுள்ளனர்.