நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட் மந்தமான பட்ஜெட் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், மத்திய பட்ஜெட் குறித்து ஏற்படுத்தப்பட்ட பல்வேறு எதிர்பார்ப்புகளை எல்லாம், பட்ஜெட் உரை தவிடுபொடியாக்கியிருக்கிறது.
முக்கிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறித்த எந்த தகவலும் இல்லை. இதனால், இது வெளிப்படைத் தன்மையற்ற பட்ஜெட்டாக உள்ளது.
பட்ஜெட் கோப்புகளை முழுமையாக படிக்க வேண்டும். உரையில் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் குறித்து வெளியிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.
90 நிமிட உரையில், மக்கள் எதிர்பார்த்த எந்த அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. சில வரிச் சலுகைகள், தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கான திட்டங்கள், புதிய ரயில்கள் என வழக்கமான பட்ஜெட் அறிவிப்புகள் ஒன்றுகூட இல்லாததால், கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.