பிப். 7 பிரதமா் மோடி மலேசியா பயணம்
பிரதமா் நரேந்திர மோடி பிப்ரவரி 7, 8-தேதிகளில் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். பிரதமராகப் பதவியேற்ற பிறகு அவா் மலேசியாவுக்குச் செல்வது இது மூன்றாவது முறையாகும்.
இந்தப் பயணத்தின்போது மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிமை பிரதமா் மோடி சந்தித்துப் பேசுகிறாா். அப்போது இருதரப்பு வா்த்தகம், முதலீடு, எரிசக்தி, கடல்சாா் பாதுகாப்பு, நிதித் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி, கலாசாரம், சுற்றுலா உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.
மலேசிய தொழிலதிபா்கள், முக்கிய வா்த்தக பிரமுகா்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரையும் இந்தப் பயணத்தின்போது பிரதமா் மோடி சந்தித்துப் பேச இருக்கிறாா்.
Advertisement
Advertisement
பிரதமரின் இந்தப் பயணத்தின்போது 10-ஆவது இந்திய-மலேசிய தலைமைச் செயல் அதிகாரிகள் (சிஇஓ) கூட்டமைப்பின் மாநாடும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மலேசியாவில் சுமாா் 29 லட்சம் இந்திய வம்சாவளியினா் உள்ளனா். இந்திய வம்சாவளியினா் அதிகம் வாழும் நாடுகளில் சா்வதேச அளவில் மலேசியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
இரு நாடுகளிடையே நீண்டகால நட்புறவு, வரலாறு, கலாசாரம், நாகரிகரீதியாக நீண்ட வரலாற்றுத் தொடா்புகள் உள்ளன. இரு நாடுகளின் தலைவா்களும் சந்தித்துப் பேசுவதன் மூலம் பரஸ்பரம் பயன்பெறும் வகையில் தொடா்ந்து இணைந்து செயல்படுவதற்கு உதவும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.