முகப்பு
இந்தியா

மத்திய பிரதேச கல்வி சமூக அலுவலகத்தில் சோதனை: நகை, ரொக்கம் பறிமுதல்!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்விச் சங்க அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட சோதனை பற்றி...

Updated On : 25 ஜூன் 2026, 2:09 pm IST
பகிர்:

நிதி முறைகேடு தொடர்பான பணமோசடி விசாரணையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்விச் சங்க அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட சோதனையில் ரொக்கப்பணம், தங்க நகைகள் பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.

ஸ்ரீ ஆஸ்தா கல்வி அறக்கட்டளைச் சங்கம் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக ஜூன் 23 அன்று இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய முகமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சௌக்ஸி குழுமத்துடன் தொடர்புடைய குடியிருப்பு வளாகங்கள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

குறிப்பிட்ட கல்விச் சங்கத்திற்குச் சொந்தமான நிதியை முறைகேடு செய்தது மற்றும் வேறு நோக்கங்களுக்கு மாற்றியது உள்ளிட்ட பெரிய அளவிலான நிதி மோசடி தொடர்பாக, மாநிலக் காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஜெயநாராயண் சௌக்ஸி மற்றும் பிறர் மீது பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை இந்த வழக்கைப்பதிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments