மாநிலங்களவைத் தேர்தல்: பிகாரில் நிதீஷ் குமார் வேட்புமனு தாக்கல்!
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் வேட்புமனு தாக்கல் செய்தது குறித்து...
இந்தியாமாநிலங்களவைத் தேர்தல்: பிகாரில் நிதீஷ் குமார் வேட்புமனு தாக்கல்!
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் வேட்புமனு தாக்கல் செய்தது குறித்து...
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தன்னுடைய வேட்புமனுவை இன்று(மார்ச் 5 ) தாக்கல் செய்தார்.
பிகார் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக நிதீஷ் குமார் அறிவித்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக தனது அரசியல் பயணத்தைத் தொடரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிகாரில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், சுமார் 20 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் நிதீஷ் குமாா் (75) முதல்வர் பதவியைவிட்டு விலகி, மாநிலங்களவை எம்.பி. பொறுப்பை ஏற்று அரசியலில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.
பிகாரில் இருந்து மாநிலங்களவைக்கு 5 புதிய எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமையுடன் (மார்ச் 5) நிறைவடைகிறது.
இந்த நிலையில், பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மாநிலங்களவைக்கான ஜேடியு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதேபோல, பாஜக சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபினும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வீட்டின் முன்பு கட்சித் தொண்டர்கள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.