முகப்பு
இந்தியா

மாநிலங்களவைத் தேர்தலில் ஜேடியு-பாஜக கூட்டணி வெற்றி பெறும்: பிகார் அமைச்சர்!

ஜேடியு-பாஜக கூட்டணி பற்றி அமைச்சர் கூறுவது..

Updated On : 16 மார்ச், 2026 at 7:27 AM
பிகார் அமைச்சர் முகமது ஜமா கான்
பகிர்:

மாநிலங்களவைத் தேர்தலில் ஜேடியு-பாஜக கூட்டணி வெற்றி பெறும் என பிகார் அமைச்சர் முகமது ஜமா கான் நம்பிக்கை தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில்,

பிகார் மக்கள் அளித்த நல்வாழ்த்துகளுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அந்த நல்வாழ்த்துகளின் காரணமாகவே நாங்கள் மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெறப் போகிறோம் என அவர் கூறினார்.

வளர்ச்சியை விரும்பும் எங்கள் அரசின் செயல்பாட்டு முறையை விரும்பும் பலரும் எங்களுடன் இணைந்துள்ளனர். வளர்ச்சியை விரும்புவதாலேயே பல தோழமைக் கட்சியினர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்.

மாநிலங்களவைத் தேர்தலானது மாநிலங்களவைக்கு மட்டுமல்லாமல், பிகார் மற்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என ஆர்ஜேடி எம்எல்ஏ ரன்விஜய் சாஹு வர்ணித்தார். மேலும், என்டிஏ கூட்டணி கணக்கிலேயே இல்லை என்றும்

யாரும் கணக்கிலிருந்து விலகிவிடவில்லை. மாறாக என்டிஏ தரப்பினர்தான் கணக்கிலிருந்து விலகிவிட்டனர். எங்கள் பலம் 50 இடங்கள் வரை உயரும். மக்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எங்களுடனேயே உள்ளன.

10 மாநிலங்களில் உள்ள 37 இடங்களை நிரப்புவதற்கான மாநிலங்களவை ஈராண்டுத் தேர்தல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

மகாராஷ்டிரம், ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், பிகார், சத்தீஸ்கர், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 37 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்தில் நிறைவடைகிறது. இதன் மூலம், புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான இடங்கள் காலியாக உள்ளன.

இவற்றில் 26 வேட்பாளர்கள் ஏற்கெனவே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டனர். தற்போது மீதமுள்ள 11 இடங்களுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் பிகாரைச் சேர்ந்த 5 இடங்கள், ஒடிசாவைச் சேர்ந்த 4 இடங்கள் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த 2 இடங்கள் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Bihar Minister Mohammad Jama Khan expressed confidence that the JD(U)-BJP alliance would emerge victorious in the Rajya Sabha elections.

முழு கட்டுரையைப் படிக்க →