முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் மேலும் 18 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

மேற்கு வங்கத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் பற்றி....

Updated On : 18 மார்ச் 2026, 6:16 pm IST
மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி - ANI
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்தில் மேலும் 13 மாவட்ட ஆட்சியர்களும் 5 டிஐஜிக்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23, 29 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. 152 தொகுதிகளுக்கு முதல் கட்டமாகவும் 142 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் மேற்கு வங்கத்தில் நேற்று 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். நள்ளிரவில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவதாக மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

Advertisement

இந்நிலையில் தொடர்ந்து இன்றும்(மார்ச் 18) 13 மாவட்ட ஆட்சியர்கள், 5 டிஐஜிக்களை மாற்றி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கூச்பெஹார், ஜல்பைகுரி, உத்தர் தினாஜ்பூர், மால்டா, முர்ஷிதாபாத், நதியா, புர்பா பர்தமான், கொல்கத்தா வடக்கு, கொல்கத்தா தெற்கு, வடக்கு 24 பர்கானாஸ், தெற்கு 24 பர்கானாஸ், டார்ஜிலிங், அலிபுர்துவார் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல ராய்கன்ச், முர்ஷிதாபாத், பர்தமான், பிரெசிடென்சி, ஜல்பைகுரி ஆகிய மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

summary

18 more IAS, IPS officers transferred in West Bengal ahead of assembly polls

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.