மேற்கு வங்கம்: மறுதேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!
மேற்கு வங்கத்தில் மறுதேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது குறித்து...
மேற்கு வங்கத்தில் ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்று முடிந்த மறுதேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
மேற்கு வங்கத்த்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், ஃபால்டா தொகுதியில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் வந்ததால் தேர்தல் ஆணையம் அந்தத் தொகுதியில் மறுதேர்தலுக்கான தேதியை அறிவித்திருந்தது.
அதன்படி, கடந்த மே 21 ஆம் தேதி, ஃபால்டா தொகுதியில் உள்ள 285 வாக்குச் சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
Advertisement
Advertisement
இந்த மறுதேர்தலில் 87 சதவிகிதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும், இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
summary