வாக்குப்பதிவு அன்று ஊதியத்துடன் விடுமுறை: அஸ்ஸாம் அரசு!
அஸ்ஸாம் சட்டப்பேரவை அன்று பொது விடுமுறை பற்றி..
அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏப்ரல் 9 ஆம் தேதி பொது விடுமுறை நாளாக அஸ்ஸாம் அரசு அறிவித்துள்ளது.
பொது நிர்வாகத் துறையின் ஆணையர் மற்றும் செயலாளரான எம். எஸ். மணிவண்ணன் வெளியிட்ட அறிவிப்பின்படி,
1881 ஆம் ஆண்டின் மாற்றத்தக்க ஆவணங்கள் சட்டத்தின் பிரிவு 25-இன் கீழ் இந்தப் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, அனைத்து அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் ஏப்ரல் 9 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத் துறை வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில்,
அனைத்து தொழிற்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள், கடைகள் மற்றும் பொதுப் பொழுதுபோக்கு அல்லது கேளிக்கை நிறுவனங்களில் ஏப்ரல் 9 ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
126 உறுப்பினர்களைக் கொண்ட அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9 அன்று வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.