அஸ்ஸாமில் அமைச்சரவை விரிவாக்கம்: 12 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு!
12 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றது பற்றி..
அஸ்ஸாம் மாநிலத்தின் பாஜகவின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் 12 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றதன் மூலம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தனது அமைச்சரவையை விரிவுபடுத்தினார்.
அமைச்சரவையில் புதிதாகச் சேர்க்கப்பட்டவர்களில் பாஜக எம்எல்ஏக்களான அஸ்வினி ராய் சர்க்கார், நிலிமா தேவி, சுஷாந்த போர்கோஹைன் ஆகியோர் அடங்குவர். முந்தைய என்டிஏ அரசில் அமைச்சராகப் பணியாற்றிய அஸ்ஸாம் கண பரிஷத் தலைவர் கேஷப் மஹந்தாவும் புதிய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். அஸ்ஸாம் பேரவையின் முன்னாள் அவைத்தலைவர் பிஸ்வஜித் டைமரி அமைச்சரவையில் இணைந்த மற்றொரு புதிய உறுப்பினர் ஆவார்.
அசோக் சிங்கால், பிமல் போரா, ஜெயந்த் மல்லாபருவா, கௌசிக் ராய், கிருஷ்ணேந்து பால், பிஜுஷ் ஹசாரிகா மற்றும் ரனோஜ் பெகு ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்ற மற்ற எம்எல்ஏக்கள் ஆவர்.
Advertisement
Advertisement
அஸ்ஸாம் ஆளுநர் லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா, இந்த 12 அமைச்சருக்குப் பதவி மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணத்தைச் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா கலந்துகொண்டார்.