மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு! - தேர்தல் ஆணையம்
மறு வாக்குப்பதிவு குறித்த தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவு பற்றி
கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சனிக்கிழமை (மே. 2) அறிவித்தது.
ஃபால்தா (144) சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மே 21-ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் கடந்த ஏப். 29-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் தேர்தல் நடைமுறை கடுமையாக மீறப்பட்டதை உறுதி செய்துள்ள தேர்தல் ஆணையம் மரு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
Advertisement
summary