மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி!
மேற்கு வங்கம்: பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு!
கொல்கத்தா : மேற்கு வங்கத்தின் ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் அரிவிக்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த நிலையில், ஃபால்டா (144) சட்டப்பேரவைத் தொகுதியில், வன்முறைகள் மற்றும் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அத்தொகுதிக்குள்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மே 21-ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு வியாழக்கிழமை(மே 21) காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. ஃபால்டா மறு தேர்தலில் 86.11 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணைய தரவுகள் தெரிவித்தன.
Advertisement
Advertisement
அங்கு வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை(மே 24) நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, முடிவுகளும் வெளியாகியுள்ளது. அதன்படி, இத்தொகுதியில் ஆளும் பாஜக சார்பில் போட்டியிட்ட தேபாங்ஷு பாண்டா, தன்னை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சம்பு நாத் கர்மியைவிட 1,09,021 வாக்குகள் அதிகம் பெற்று பெருவெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின்மூலம், மேற்கு வங்க சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்ந்தது. முன்னதாக, கடந்த மே 4-இல் நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 இடங்களில் 207-இல் வென்று ஆட்சியமைத்தது பாஜக. முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜியை பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு வீழ்த்திய அம்மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி முதல்வர் பதவியேற்றார்.
சுவேந்து அதிகாரி மொத்தம் இரு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இரண்டிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து, நந்திகிராம் தொகுதியில் பெற்ற வெற்றியை அவர் ராஜிநாமா செய்தார். இதையடுத்து, அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
Falta election results : BJP candidate Debangshu Panda on Sunday recorded a massive win with a margin of 1,09,021 votes against Communist Party of India (Marxist) candidate Sambhu Nath Kurmi.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.