முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதி மறுதேர்தல் முடிவுகள் - பாஜக அமோக வெற்றி!

மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது... மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதி மறுதேர்தல் முடிவுகள் - யாருக்கு வெற்றி?

மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுகள் - கோப்புப்படம் PTI
பகிர்:

கொல்கத்தா : மேற்கு வங்கத்தின் ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் அரிவிக்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த நிலையில், ஃபால்டா (144) சட்டப்பேரவைத் தொகுதியில், வன்முறைகள் மற்றும் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அத்தொகுதிக்குள்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மே 21-ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு வியாழக்கிழமை(மே 21) காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. ஃபால்டா மறு தேர்தலில் 86.11 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணைய தரவுகள் தெரிவித்தன.

Advertisement

Advertisement

அங்கு வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை(மே 24) நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, முடிவுகளும் வெலியாகியுள்ளது. அதன்படி, இத்தொகுதியில் ஆளும் பாஜக சார்பில் போட்டியிட்ட தேபாங்ஷு பாண்டா, தன்னை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சம்பு நாத் கர்மியைவிட 1,09,021 வாக்குகள் அதிகம் பெற்று பெருவெற்றி பெற்றார்.

summary

Falta election results : BJP candidate Debangshu Panda on Sunday recorded a massive win with a margin of 1,09,021 votes against Communist Party of India (Marxist) candidate Sambhu Nath Kurmi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.