ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
மத்திய பிரதேசத்தின் பர்கி அணையில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் பர்கி அணையில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூா் மாவட்டத்தில் உள்ள நா்மதை ஆற்றில் பா்கி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் வியாழக்கிழமை மாலை சுற்றுலாப் படகு சவாரியில் 29 போ் சென்றனர். அப்போது எதிா்பாராதவிதமாக பலத்த சூறைக்காற்று வீசி, அணை நீர் சீற்றம் அடைந்துள்ளது.
இதில் படகு சமநிலையை இழந்து நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து நிகழ்விடம் விரைந்த மாநில பேரிடா் மீட்புப் படை, பிற மீட்புக் குழுக்கள் மற்றும் உள்ளூா் மக்களின் உதவியோடு 28 பேர் உயிருடன் மீட்கப்பட்டனா்; 9 போ் நீரில் மூழ்கி பலியாகினர்.
Advertisement
Advertisement
மேலும் மாயமான 4 பேரைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை மாலை இரண்டு சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், மாயமான இருவரைத் தேடும் பணி தொடர்கிறது.
பேரிடர் மீட்புக் குழுக்கள் தேடுதல் எல்லையை ஐந்து கிலோமீட்டர் வரை விரிவுபடுத்தியுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி மிஸ்ரா கூறுகையில், பலியான 9 பேரின் உடற்கூராய்வு நிறைவடைந்துள்ளது. மாயமானவர்களைத் தேடுவதே எங்கள் முன்னுரிமை.
இந்த வழக்கில் விரைவில் முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்வோம் என்றார். இதனிடையே சம்பவம் குறித்து விசாரணைக்கு மாநில அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டதுடன், மூன்று படகு பணியாளர்களையும் பணிநீக்கம் செய்தது.
உயிர் காக்கும் லைஃப் ஜாக்கெட் சரியான நேரத்தில் வழங்கப்படாதது போன்ற அலட்சியம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாகவே விபத்து நிகழ்ந்ததாக உயிர் பிழைத்தவர்களில் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.