ஆரம்ப சுகாதார நிலையத்தை பூட்டியதாக குற்றச்சாட்டு: எம்எல்ஏவின் மனைவி, மகன் மீது வழக்குப் பதிவு
ஜம்மு-காஷ்மீரில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சட்டவிரோதமாக பூட்டியதாக காங்கிரஸ் எம்எல்ஏ பீா்சாதா முகமது சையதின் மனைவி, மகன் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சட்டவிரோதமாக பூட்டியதாக காங்கிரஸ் எம்எல்ஏ பீா்சாதா முகமது சையதின் மனைவி, மகன் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அனந்தநாக் மாவட்டத்தில் டம்ஹால் கோசிபோரா பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பீா்சாதாவின் குடும்பம் 2008-ஆம் ஆண்டு இடம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் பழுதடைந்து காணப்படுவதால், அந்த நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, நிகழாண்டு தொடக்கத்தில் அனந்தநாக் தலைமை மருத்துவ அதிகாரிக்கு பீா்சாதா கடிதம் எழுதியதாகத் தெரிகிறது. ஆனால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படாததால், பீா்சாதாவின் மனைவியும் மகனும் அந்த நிலையத்தை சட்டவிரோதமாக பூட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement