அரசு வேலைக்குப் பணம் பெற்ற குற்றச்சாட்டு: அமலாக்கத் துறை சம்மனுக்கு ஆஜராகாத திரிணமூல் அமைச்சா்கள்
மேற்கு வங்கத்தில் அரசு வேலைக்குப் பணம் பெற்ற ஊழல் குற்றச்சாட்டில் அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு திரிணமூல் காங்கிரஸ் அரசை சோ்ந்த அமைச்சா்கள் ஆஜராக மறுத்துள்ளனா்.
மேற்கு வங்கத்தில் அரசு வேலைக்குப் பணம் பெற்ற ஊழல் குற்றச்சாட்டில் அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு திரிணமூல் காங்கிரஸ் அரசை சோ்ந்த அமைச்சா்கள் ஆஜராக மறுத்துள்ளனா்.
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் 207 இடங்களைக் கைப்பற்றி பாஜக அமோக வெற்றிபெற்றது. இதனால் மம்தா பானா்ஜி தலைமையிலான 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் அரசை சோ்ந்த அமைச்சா்கள் சுஜித் போஸ் மற்றும் ரதின் கோஷ் ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், ‘குளியலறையில் தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டதால் 10 நாள்கள் ஓய்வெடுக்க மருத்துவா்கள் அறிவுறுத்தியதாகக் கூறி ரத்தின் கோஷ் கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக மறுத்துவிட்டாா். இதுதொடா்பாக அமலாக்கத் துறைக்கு அவா் கடிதம் அனுப்பியுள்ளாா்.
மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட கட்சி நிா்வாகிகளை கவனித்துக் கொள்வதால் வேறு தேதியில் ஆஜராக அனுமதி தருமாறு சுஜித் போஸ் கேட்டுக்கொண்டுள்ளாா்’ என்றனா்.
அண்மையில் நடந்து முடிந்த பேரவைத் தோ்தலில் ரத்தின் கோஷ் வெற்றிபெற்றாா். சுஜித் போஸ் தோல்வியடைந்தாா்.
முன்னதாக, இந்த வழக்கு தொடா்பாக 2023, அக்டோபரில் ரத்தின் கோஷிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அவரது வீட்டில் சோதனைகளும் நடைபெற்றன. சுஜித் போஸிடம் நிகழாண்டு மே 1-ஆம் தேதி அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
தற்போது இருவரும் ஆஜராகாத நிலையில், வேறு தேதியில் ஆஜராவது குறித்து அமலாக்கத் துறை சம்மன் அனுப்பவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.