பிகார் அமைச்சரவை விரிவாக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!
பிகார் அமைச்சரவை விரிவாக்க விழாவில் பங்கேற்பது பற்றி..
பிகார் மாநிலத்தில் பாஜக தலைமையிலான என்டிஏ அரசின் அமைச்சரவை விரிவாக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பாட்னாவுக்கு வருகை தந்துள்ளார்.
விமான நிலையத்திலிருந்து காந்தி திடலுக்குப் புறப்பட்ட பிரதமரை, சாலையின் இருபுறமும் வரிசையாக நின்றிருந்த மக்கள், முழக்கங்களை எழுப்பியவாறே மலர்களைத் தூவி வரவேற்றனர்.
பிகாரில், கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வான நிதீஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதனால், முதல்முறையாக பாஜகவின் சாம்ராட் சௌதரி கடந்த ஏப். 14 ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றார்.
இந்த நிலையில், பிகாரின் அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் காந்தி திடலில் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள உள்ளனர்.
பிகாரில் முதல்வர் பதவியை வகிக்கும் பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சௌத்ரி பொறுப்பேற்றுள்ளதால், இந்த நிகழ்வை பாஜகவினர் ஒரு உண்மையான கொண்டாட்டமாகவே கருதுகின்றனர்.
சௌத்ரியுடன் இணைந்து, ஜனதா தளத்தைச் சேர்ந்த விஜய் குமார் சௌத்ரி, பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோரும் அமைச்சரவை உறுப்பினர்களாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.