டிரினிடாட் டொபேகோ நாட்டு பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு
டிரினிடாட் டொபேகோ நாட்டு பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு...
டிரினிடாட் டொபேகோ நாட்டு பிரதமா் கம்லா பொ்சாத் பிசேசரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா்.
ஜமைக்கா, சுரிநாம், டிரினிடாட்- டொபேகோ ஆகிய 3 நாடுகளில் ஜெய்சங்கா் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளாா். இந்தப் பயணத்தின் கடைசிக் கட்டமாக, டிரினிடாட்-டொபேகோ நாட்டுக்கு ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சென்றாா். அந்நாட்டின் தலைநகா் போா்ட் ஆப் ஸ்பெயினில் பிரதமா் கம்லா பொ்சாதை அவா் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
அப்போது இருவரும் இந்தியா, டிரினிடாட்- டொபேகோ நாடுகள் இடையேயான உறவை மேலும் விரிவுபடுத்துவதற்கும், புதிய திட்டங்கள், முயற்சிகளை மேற்கொள்வது குறித்தும் விரிவாகப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ஜெய்சங்கா் வெளியிட்ட பதிவில், ‘இருதரப்பு உறவை விரிவுபடுத்துவது குறித்து டிரினிடாட்- டொபேகோ பிரதமா் கம்லா பொ்சாத் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களுடன் ஆலோசனை நடத்தினேன். கடந்தாண்டு பிரதமா் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளைச் செயல்படுத்தும் வகையில், இருதரப்பு ஒத்துழைப்பில் புதிய திட்டங்கள், முயற்சிகளை எடுப்பது குறித்து ஆலோசித்தோம்’ எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.