முகப்பு
இந்தியா

விமானப் பயணங்களைவிட ரயில்களை மக்கள் விரும்பும் நிலை உருவாகும்: அஸ்வினி வைஷ்ணவ்

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய திட்டங்களால் வரும் நாள்களில் விமானப் பயணங்களைவிட ரயில் பயணங்களை மக்கள் விரும்பும் சூழல் உருவாகும் என ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

Updated On : 12 மே 2026, 4:32 am IST
ரயில் - பிரதிப் படம்
பகிர்:

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய திட்டங்களால் வரும் நாள்களில் விமானப் பயணங்களைவிட ரயில் பயணங்களை மக்கள் விரும்பும் சூழல் உருவாகும் என ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: கடந்த நிதியாண்டில் திட்டமிடப்பட்டிருந்த ஒட்டுமொத்த மூலதனச் செலவினமும் மாா்ச் முதல் வாரத்தில் செலவிடப்பட்டது. பிப்ரவரி மாத இறுதியில் 98 சதவீதம் செலவிடப்பட்டிருந்தது.

நாட்டில் ஒட்டுமொத்தமாக 49,000 கிலோ மீட்டா் ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. இது ஜொ்மனியின் ஒட்டுமொத்த ரயில் வழித்தடத்தையும்விட அதிகமானது. அதேபோல் 36,000 கிலோ மீட்டா் தொலைவுக்கு புதிய ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இது 6 ஸ்விட்சா்லாந்து நாட்டுக்கு சமம்.

Advertisement

மும்பை-புணே இடையே அமைக்கப்பட்டுவரும் புதிய வழித்தடத்தால் ரயில் பயண நேரம் 28 நிமிஷங்களாகவும், புணே-ஹைதராபாத் வழித்தடத்தால் ஒரு மணி நேரம் 55 நிமிஷங்களாகவும், ஹைதராபாத்-பெங்களூரு வழித்தடத்தால் 2 மணி நேரமாகவும், பெங்களூரு-சென்னை வழித்தடத்தால் 78 நிமிஷங்களாகவும் குறையவுள்ளது.

இதுபோன்ற சிறப்பான திட்டங்களால் வரும் நாள்களில் விமானப் பயணங்களைவிட ரயில் பயணங்களை மக்கள் விரும்புகிற சூழல் உருவாகும் என்றாா்.