கோடா மருத்துவமனை அவலம்! 4 கர்பிணிகள் மரணம்! 6 பெண்கள் கவலைக்கிடம்
கோடா மருத்துவமனைகளில் 4 கர்ப்பிணிகள் மரணம் அடைந்தது பற்றி..
ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைகளில், 4 கர்ப்பிணிகள் மரணம் அடைந்த நிலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உடல்களை வாங்க மறுத்து மருத்துவமனை கவனக்குறைவால் பெண்கள் இறந்துவிட்டதாக குடும்பத்தினர் கடும் அதிருப்தியுடன் மருத்துவமனைகளில் அமர்ந்துள்ளனர்.
கோட்டாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி மரணமடைந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது மற்றொரு மருத்துவமனையில் 2 பெண்கள் பலியாகினர். மீண்டும் அரசு மருத்துவமனை ஒன்றில் மேலும் ஒரு கர்ப்பிணி உயிரிழந்துள்ளார்.
Advertisement
மேலும், சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8 பெண்கள் சிறுநீரகப் பிரச்னைகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கோட்டாவில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெற்ற பெண்களின் நிலைகள் அடுத்தடுத்த நாள்களில் மோசமடைந்து வருகிறது. ஒரு பெண்ணுக்கு கருப்பையில் ரத்தம்கட்டியிருந்ததாகக் கூறி மற்றொரு அறுவை சிகிச்சை செய்து கருப்பையே அகற்றப்பட்டுள்ளது. அப்போதும் நிலைமை மோசமடைந்து அவர் மரணமடைந்துள்ளார்.
இது குறித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளின் மரணங்களுக்கு கவனக்குறைவா? போலி மருந்துகளா? சிகிச்சையில் குறைபாடா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.