மிக இளம் வயது மேயர்! பிரிட்டன் வரலாற்றில் இடம்பெற்ற இந்திய வம்சாவளி இளைஞர்!!
பிரிட்டன் வரலாற்றில் மிகவும் இளம் வயது மேயர் என்ற பெருமையை இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் பெற்றிருக்கிறார்.
பிரிட்டன் வரலாற்றில் மிகவும் இளம் வயது மேயர் என்ற பெருமையை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் பெற்றிருக்கிறார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டல்ன் உள்ள கிங்ஸ் கல்லூரியில் படித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் துஷார் குமார். 23 வயதான இவர் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றிருக்கிறார்.
தொழிலாளர் கட்சி கவுன்சிலரான இவர், 2023 ஆம் ஆண்டில் எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹாம்வுட் நகர கவுன்சிலில் இணைந்தார்.
Advertisement
இந்த நிலையில், இவர் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹாம்வுட் நகர மேயராகப் பொறுப்பேற்றுள்ளார்.
மேயராகப் பதவியேற்பதற்கு முன், அவர் துணை மேயராகப் பணியாற்றியுள்ளார். மேலும், அவர் போர்ஹாம்வுட்டில் சமூகப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து துஷார் குமார் கூறுகையில், “பிரிட்டன் வரலாற்றில் மிக இளம் வயது இந்திய வம்சாவளி மேயர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறேன்.
இது ஒரு மகத்தான கௌரவம். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் அரசியல் அறிவியல் படித்ததிலிருந்து இப்போது நகரத்தின் மேயராகப் பணியாற்றுவது வரை, இந்தப் பயணம் உண்மையிலேயே ஒரு கனவு போல இருக்கிறது. தொடர்ந்து மக்களுக்கான பணியில் ஈடுபட விரும்புகிறேன்” என்றார்.