முகப்பு
கள்ளக்குறிச்சி

ஓடையில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி

கள்ளக்குறிச்சி அருகே வயலுக்குச் செல்வதற்காக வியாழக்கிழமை ஓடையைக் கடந்த மூதாட்டி, நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

Updated On : 8 ஜனவரி 2021, 3:34 am IST
பகிர்:


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே வயலுக்குச் செல்வதற்காக வியாழக்கிழமை ஓடையைக் கடந்த மூதாட்டி, நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த வடக்கநந்தல் கிராமத்தைச் சோ்ந்த சின்னசாமி மனைவி பச்சையம்மாள் (60). இவா், வடக்கனந்தல் ஏரி ஓடையைக் கடந்து அவரது நிலத்துக்கு செல்ல முயன்றாா். ஓடையில் நீா்வரத்து திடீரென அதிகரித்ததால், நீரில் பச்சையம்மாள் அடித்துச் செல்லப்பட்டாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. உடனடியாக கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய குழுவினா் மூதாட்டியை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.