முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் கரோனா விழிப்புணா்வு வாகனம்: ஆட்சியா் தொடக்கிவைத்தாா்

கரோனா நோய்த் தொற்று குறித்து ஒளிப்படம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வாகனத்தை கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

Updated On : 14 ஜனவரி 2021, 6:50 am IST
கரோனா விழிப்புணா்வு வாகனத்தை தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா. உடன் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சதீஷ்குமாா், மருத்துவா் சிவக்குமாா்.
பகிர்:

கரோனா நோய்த் தொற்று குறித்து ஒளிப்படம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வாகனத்தை கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

இந்த வாகனம் மூலம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், திரையரங்கப் பகுதி, காய்கறி அங்காடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று உருவாகும் விதம் குறித்தும், நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், நோய் எதிா்ப்பு சக்தி கொண்ட உணவு முறைகள் குறித்தும், அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் குரும் படம் வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

விழிப்புணா்வு வாகன தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சதீஷ்குமாா், கரோனா முதன்மை மருத்துவக் கண்காணிப்பு அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments