முகப்பு
காஞ்சிபுரம்

ஜமாபந்தி இன்று தொடக்கம்

செங்கல்பட்டு, பாலூர், ஆப்பூர் உள்ளிட்ட குறு வட்டங்களுக்கான 1422-ஆம் பசலிக்கான வருவாய் தீர்ப்பாயம்(ஜமாபந்தி) வியாழக்கிழமை

Updated On : 2 மே, 2013 at 12:54 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM

செங்கல்பட்டு, பாலூர், ஆப்பூர் உள்ளிட்ட குறு வட்டங்களுக்கான 1422-ஆம் பசலிக்கான வருவாய் தீர்ப்பாயம்(ஜமாபந்தி) வியாழக்கிழமை தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

  செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் டி.ராஜ்குமார் முன்னிலையில் ஜமாபந்தி நடைபெறவுள்ளது.

  இதில் வியாழக்கிழமை செங்கல்பட்டு, வெள்ளிக்கிழமை பாலூர் மற்றும் ஆப்பூர், மே 7-ஆம் தேதி காட்டாங்கொளத்தூர், 7, 8-ஆம் தேதி சிங்கபெருமாள்கோயில், 8-ஆம் தேதி கூடுவாஞ்சேரி, 9-ஆம் தேதி வண்டலூர் ஆகிய குறுவட்டங்களுக்கான ஜமாபந்தி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

Advertisement

 பட்டா நகல் கோரும் பட்டதாரர்கள் அப்போது மனு கொடுத்து பட்டா பெற்றுக் கொள்ளலாம். பட்டா மாறுதல் மற்றும் பொதுமக்கள் குறைகளான சாலை சீரமைத்தல், தெருவிளக்குகள், குடிநீர், பஸ் வசதி தொடர்பான மனுக்களும் பெறப்படும். வருவாய் தீர்ப்பாயம் நிறைவு நாளன்று விவசாயிகள் கூட்டம் நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு வட்டாட்சியர் எஸ்.தாஸ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.