முகப்பு
காஞ்சிபுரம்

மதுராந்தகம் அருகே சாலை விபத்து: கல்லூரி முதல்வர் உள்பட 2 பேர் சாவு

மதுராந்தகம் அருகே புதன்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் உள்பட 2 பேர்

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:14 am IST
பகிர்:

மதுராந்தகம் அருகே புதன்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

  காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே சின்னகொளப்பாக்கத்தில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்படுகிறது. இக்கல்லூரியின் முதல்வர் சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த ரங்கராஜுலு (60), கல்லூரி நிர்வாக அலுவலர் நாராயணன் மனைவி மீனா (37) ஆகியோர் சென்னையில் இருந்து கல்லூரிக்கு புதன்கிழமை காரில் சென்றுள்ளனர். காரை சாந்தகுமார் (30) ஓட்டி வந்துள்ளார்.

 சென்னையில் இருந்து வந்த கார் கல்லூரிக்குச் செல்ல சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வலது புறமாக திரும்பியுள்ளது. அப்போது திருச்சி மார்க்கத்தில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த லாரி, காரில் மோதியது.

Advertisement

Advertisement

÷இந்த விபத்தில் கார் அப்பளமாக நொறுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த படாளம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காரில் உயிருக்கு போராடிய 3 பேரையும் மீட்டு சென்னை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

÷அங்கு தனியார் கல்லூரி முதல்வர் ரங்கராஜுலு, டிரைவர் சாந்தகுமார் ஆகியோர் இறந்தனர். மீனா தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து படாளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.