முகப்பு
காஞ்சிபுரம்

திரெளபதியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

கூடுவாஞ்சேரி அருகே திரெளபதியம்மன் ஆலய கும்பாபிஷேகம் புதன்கிழமை சிறப்புடன் நடைபெற்றது.

Updated On : 12 செப்டம்பர் 2013, 10:56 am IST
பகிர்:

கூடுவாஞ்சேரி அருகே திரெளபதியம்மன் ஆலய கும்பாபிஷேகம் புதன்கிழமை சிறப்புடன் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே கால்வாய் கிராமத்தில் திரெளபதியம்மன் ஆலயம் உள்ளது.

இக்கோயிலில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை தொடங்கியது. அன்றைய தினம் மாலை ஆசார்யவர்ணம், அனுகிரஹம், பகவத், அக்னிபிரதிஷ்டை, வாஸ்து ஹோமம், பாலிகை பிரதிஷ்டை, பூர்ணாஹூதியுடன் தொடங்கியது.

Advertisement

Advertisement

செவ்வாய்க்கிழமை காலை முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அன்று மாலை 5 மணிக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து திரெளபதியம்மன், பஞ்சப் பாண்டவர்களுக்கும் அபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா, புதன்கிழமை காலை 5 மணிக்கு கோ பூஜையுடன் தொடங்கியது. பின்னர் கன்யாபூஜை, சுமங்கலிபூஜை, தசதானபூஜை ஆகியன நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா பூர்ணாஹூதியாகி, மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் திரண்டு நின்று தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.