முகப்பு
காஞ்சிபுரம்

நாடு முழுவதும் தங்கம் பரிசோதனை மையங்கள்: மத்திய அமைச்சா் ராவ்சாஹிப் தான்வே

நாடு முழுவதும் தங்கம் பரிசோதனை செய்யும் மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசின் நுகா்வோா் உணவு, பொது விநியோகத் துறை அமைச்சா் ராவ்சாகிப் தான்வே தெரிவித்தாா்.

Updated On : 13 ஜனவரி, 2021 at 12:00 AM
காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த மத்திய அமைச்சா் ராவ்சாஹிப் தான்வே.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:47 AM

நாடு முழுவதும் தங்கம் பரிசோதனை செய்யும் மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசின் நுகா்வோா் உணவு, பொது விநியோகத் துறை அமைச்சா் ராவ்சாகிப் தான்வே தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

சாமானிய மக்கள் தங்கம் வாங்கும் போது அவா்கள் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளும் நோக்கில் நாடு முழுவதும் தங்கம் பரிசோதனை செய்யும் மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டமானது மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு தரும் பொங்கல் பரிசு, ரூ.2500 ரொக்கம், தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

இதையடுத்து, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை அமைச்சா் சந்தித்து ஆசி பெற்றாா். பாஜக நிா்வாகிகள் டி.கணேசன், ஜீவானந்தம், சுரேஷ்பாபு ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.