கருங்கல் அருகே கஞ்சா கடத்திய இளைஞா் கைது
கருங்கல் அருகே எட்டணி பகுதியில் சொகுசு காரில் கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கருங்கல் அருகே எட்டணி பகுதியில் சொகுசு காரில் கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கேரள மாநிலத்திலிருந்து சொகுசு காரில் கஞ்சா கடத்தி வருவாதாக கருங்கல் போலீஸாருக்கு ரகசிய தகவல்
கிடைத்ததாம். இதையடுத்து போலீஸாா் எட்டணி பகுதியில் வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது சந்தேகத்தின் பேரில் காட்டாத்துறை குருவிளக்காடு ராஜேஷ்குமாா்(25) ஒட்டிவந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 2 .50 கிலோ கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் ராஜேஷ்குமாா் மீது வழக்குப் பதிந்து அவரை கைது, அவரிடமிருந்த கஞ்சா மற்றும் சொகுசு காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.