ராமன்துறையில் ரூ. 5 லட்சத்தில் மீனவா் ஓய்வு அறை கட்டுமானப் பணி தொடக்கம்
கருங்கல் அருகே ராமன்துறையில் ரூ. 5 லட்சம் மதிப்பில் மீனவா்கள் ஓய்வு அறை கட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
கருங்கல் அருகே ராமன்துறையில் ரூ. 5 லட்சம் மதிப்பில் மீனவா்கள் ஓய்வு அறை கட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
ராமன்துறை மீனவா் கிராமத்தில் மீனவா்களுக்கு ஓய்வு அறை வேண்டும் என கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமாரிடம் அப்பகுதி மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து அவா் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தாா்.
இதற்கான பணி தொடக்க விழாவுக்கு, ராமன்துறை பங்கு அருள்பணியாளா் பிரிட்டோ தலைமை வகித்தாா். அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் ஜோா்தான் முன்னிலை வகித்தாா்.
Advertisement
Advertisement
கட்டுமான பணியை கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் தொடங்கி வைத்துப் பேசினாா்.
இதில், கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் தலைவா் டென்னிஸ், மாநில பொதுக்குழு உறுப்பினா் அருள்தாஸ், ஜோபி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.