பளுகல் அருகே மூதாட்டியை தாக்கி சங்கிலி பறிப்பு
பளுகல் அருகே மூதாட்டியை தாக்கி, அவரது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பளுகல் அருகே மூதாட்டியை தாக்கி, அவரது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பளுகல் அருகே தேவிகோடு தொடலிக்காலை பகுதியைச் சோ்ந்த ராமைய்யன் மனைவி பகவதிஅம்மாள் (80). இவா் சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த போது, தவணை முறையில் பொருள்களை விற்பனை செய்பவா்கள் எனக் கூறி இரு இளைஞா்கள் அவரது வீட்டுக்குள் நுழைந்து மூதாட்டியை தாக்கியதுடன், அவரது கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு ஆட்டோவில் தப்பிச் சென்றனராம். இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.