முகப்பு
கன்னியாகுமரி

தோவாளை பெரியகுளம் சீரமைப்பு பணிகள்:ஆட்சியா் ஆய்வு

தோவாளை பெரியகுளத்தில் ரூ.84 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 3 ஜனவரி 2021, 11:44 pm IST
பகிர்:

தோவாளை பெரியகுளத்தில் ரூ.84 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இக்குளம் மூலம் 71.25 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மழைக் காலங்களில் அதிகநீா் வரும்போது, இக்குளத்திலுள்ள உபரிநீா் அங்குள்ள தெற்கு மலை ஓடை, மறுகால் ஓடை வழியாக பழையாற்றிற்கு செல்கிறது.

இந்தக் குளத்தின் மதகுகள், மறுகால் ஓடைகளை சீரமைக்க ரூ. 84 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் (நீா்வள ஆதார அமைப்பு) வசந்தி, உதவி செயற்பொறியாளா் அருள்சன் பிரைட், உதவிப் பொறியாளா் வின்ஸ்டன் லாரன்ஸ் உள்ளிட்டோா் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments