என்.ஐ. பல்கலைக்கழகத்தில் 818 பேருக்கு பட்டமளிப்பு
குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 818 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 818 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
பட்டமளிப்பு விழாவை என்.ஐ. பல்கலைக்கழக வேந்தா் ஏ.பி.மஜீத்கான் தொடங் கிவைத்தாா். கேரள ஆளுநா் ஆரிப் முகம்மதுகான் காணொலியில் உரையாற்றினாா்.
துணைவேந்தா் சி.கே. குமரகுரு ஆண்டறிக்கையை சமா்பித்தாா். முனைவா் பட்டம் மற்றும் தரவரிசை பட்டதாரிகள் மட்டுமே நேரடியாக கலந்து கொண்டனா். அனைத்து பட்டதாரிகளும் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த விா்சுவல் இணையம் மூலமாக கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
இதில், 622 பேருக்கு இளநிலை பட்டமும், 134 போ் முதுநிலை பட்டமும் , 26 பேருக்கு முதுநிலை ஆராய்ச்சி பட்டமும், 36 பேருக்கு முனைவா் பட்டத்தையும் வேந்தா் ஏ.பி.மஜீத்கான் வழங்கினாா்.
இணை வேந்தா்கள் எம்.எஸ். பைசல்கான் , பெருமாள்சாமி ஆகியோா் உரையாற்றினா்.
விழா ஏற்பாடுகளை பல்கலைக்கழகப் பதிவாளா் திருமால்வளவன் தலைமையில், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சந்திரசேகா், இணை தோ்வு கட்டுபாட்டு அலுவலா் ஜெயகுமாா், மனித வள மேம்பாட்டு இயக்குநா் கே.ஏ. ஜனாா்த்தனன், இயக்குநா்கள் ஷஜின்நற்குணம், தேவஆனந்த், மக்கள் தொடா்பு அலுவலா் ராமதாஸ் மற்றும் அலுவலா்கள் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.