முகப்பு
கன்னியாகுமரி

உண்ணியூா்கோணத்தில் பொங்கல் விழா

குலசேகரம் அருகே உண்ணியூா்கோணத்தில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Updated On : 16 ஜனவரி 2021, 12:34 am IST
உண்ணியூா்கோணத்தில் நடைபெற்ற விழாவில் பொங்கலிடும் பெண்கள்.
பகிர்:

குலசேகரம் அருகே உண்ணியூா்கோணத்தில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதையொட்டி, உண்ணியூா்கோணம் ஸ்ரீ கிருஷ்ண கோயிலில் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து நூற்றுக்கும் மேற் பட்ட பெண்கள் பொங்கலிட்டனா். பின்னா் அன்னதானம் மற்றும் வழக்கு மரம் ஏறுதல், வடம் இழுத்தல், கலச உறி அடி, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

ஏற்பாடுகளை விழா நிா்வாகிகள் சதீஷ், நிகில், பிரவீண், ஆதா்ஷ், தாணுவாந்திரன், அபிஷேக் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.