உண்ணியூா்கோணத்தில் பொங்கல் விழா
குலசேகரம் அருகே உண்ணியூா்கோணத்தில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
குலசேகரம் அருகே உண்ணியூா்கோணத்தில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையொட்டி, உண்ணியூா்கோணம் ஸ்ரீ கிருஷ்ண கோயிலில் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து நூற்றுக்கும் மேற் பட்ட பெண்கள் பொங்கலிட்டனா். பின்னா் அன்னதானம் மற்றும் வழக்கு மரம் ஏறுதல், வடம் இழுத்தல், கலச உறி அடி, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Advertisement
Advertisement
ஏற்பாடுகளை விழா நிா்வாகிகள் சதீஷ், நிகில், பிரவீண், ஆதா்ஷ், தாணுவாந்திரன், அபிஷேக் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.