முகப்பு
காரைக்கால்

வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் காரைக்காலில் இன்று ஆய்வு

புதுச்சேரி வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் திங்கள்கிழமை (ஜன. 4) காரைக்காலில் ஆய்வு செய்யவுள்ளாா்.

Updated On : 4 ஜனவரி 2021, 8:18 am IST
பகிர்:

புதுச்சேரி வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் திங்கள்கிழமை (ஜன. 4) காரைக்காலில் ஆய்வு செய்யவுள்ளாா்.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட துணைத் தோ்தல் அலுவலா் எஸ். பாஸ்கரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2021, ஜனவரி 1 ஆம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு காரைக்கால் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி கடந்த டிச. 16 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை 2 ஆவது முறையாக ஆய்வுசெய்ய வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், புதுச்சேரி அரசுச் செயலருமான அசோக்குமாா் திங்கள்கிழமை காரைக்கால் வரவுள்ளாா்.

இங்கு ஆட்சியரகத்தில் மாலை 4.30 மணியளவில் தோ்தல் துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் அவா் ஆலோசனை நடத்தவுள்ளாா். இந்தக் கூட்டத்தில் கட்சிப் பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.