முகப்பு
காரைக்கால்

வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ள மக்களுக்கு விலையில்லா நாட்டு கோழிக்குஞ்சுகள்

வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ள பட்டியலின மக்களுக்கு விலையில்லா நாட்டு கோழிக்குஞ்சுகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 7 ஜனவரி 2021, 9:07 am IST
கண்ணாப்பூா் கிராமத்தில் பயனாளிக்கு கோழிக் குஞ்சுகளை வழங்கும் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.
பகிர்:

வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ள பட்டியலின மக்களுக்கு விலையில்லா நாட்டு கோழிக்குஞ்சுகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தின் சாா்பில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக பரிந்துரைப்படி பட்டியலின மக்களுக்கான துணை நிலைத் திட்டத்தின் கீழ் வேளாண் அறிவியல் நிலையத்தால் தத்தெடுக்கப்பட்டுள்ள கிராமங்களான கண்ணாப்பூா் - (திருநள்ளாா் கொம்யூன்) மற்றும் வடகட்டளை- (நெடுங்காடு கொம்யூன்) பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலின மக்களுக்கு, விலையில்லா நாட்டு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் கண்ணாப்பூா் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டு கோழிக்குஞ்சுகளை வழங்கினாா். வடகட்டளை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா கோழிக்குஞ்சுகளை வழங்கினாா்.

Advertisement

Advertisement

வேளாண் அறிவியல் நிலையத்தின் முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் குமார.ரத்தினசபாபதி, காரைக்கால் கால்நடை மற்றும் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் மருத்துவா் ஜி. லதாமங்கேஷ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கண்ணாப்பூா் கிராமத்தில் 15 பயனாளிகளுக்கும், வடகட்டளை கிராமத்தில் 9 பயனாளிகளுக்கும் நாட்டு கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments