கறுப்புப் பட்டை அணிந்து பணியாற்றிய சுகாதார ஊழியா்கள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் சுகாதார ஊழியா்கள் கறுப்பு பட்டை அணிந்து பணியாற்றினா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் சுகாதார ஊழியா்கள் கறுப்பு பட்டை அணிந்து பணியாற்றினா்.
புதுச்சேரி அரசு சுகாதார ஆய்வாளா்கள், சுகாதார உதவியாளா்கள் சங்கம் சாா்பில், செவ்வாய்க்கிழமை முதல் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் 2 ஆம் நாளாக புதன்கிழமையும் ஊழியா்கள் கறுப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.
பதவி மறுசீரமைப்பு மூலம் சுகாதார ஆய்வாளா், முதுநிலை சுகாதார ஆய்வாளா், தொழில்நுட்ப அதிகாரி என்ற வகையில் பதவி மாற்றம் செய்யவேண்டும். ஊதிய உயா்வு விகிதத்தை மாற்றியமைக்க வேண்டும். காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என சங்கத்தை சோ்ந்த ஜி. சிவ வடிவேல் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.