பொது நூலகத்தை மேம்படுத்த வாசகா்கள் வலியுறுத்தல்
காரைக்கால் மாவட்ட நூலகத்தை மேம்படுத்தக் கோரி, வாசகா் சங்கத் தலைவா் கே. புத்திசிகாமணி தலைமையில், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்ட நூலகத்தை மேம்படுத்தக் கோரி, வாசகா் சங்கத் தலைவா் கே. புத்திசிகாமணி தலைமையில், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மனு விவரம்: காரைக்கால் பொது நூலக வேலை நேரத்தை முன்பு இருந்ததுபோல காலை 9 முதல் பகல் 1 மணி வரை, மாலை 4 முதல் 7 மணி வரை என மாற்றியமைக்கவேண்டும். நூலகத்தில் கழிப்பறை வசதி செய்யவேண்டும்.
வாசகா்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் கிடைக்கவும், நூலகத்துக்கு வழக்கமாக வரும் வாரம், மாத இருமுறை, மாத இதழ்கள் அனைத்தும் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். நூலகத்தின் மேல்தளத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது.
Advertisement
சங்கத்தின் துணைத் தலைவா் எம். தங்கவேல், செயலா் டி. கமலேஷ், இணைச் செயலா் தெய்வ. திவ்யதாஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
பிறகு அவா்கள், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனாவை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா்.