முகப்பு
காரைக்கால்

காணும் பொங்கல்: கடற்கரையில் மக்கள் உற்சாகம்

காணும் பொங்கலையொட்டி, காரைக்கால் கடற்கரையில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பட்டம் விட்டும், பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டும் மகிழ்ந்தனா்.

Updated On : 17 ஜனவரி, 2021 at 8:25 AM
காரைக்கால் கடற்கரையில் காணும் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடிய மக்கள்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

காணும் பொங்கலையொட்டி, காரைக்கால் கடற்கரையில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பட்டம் விட்டும், பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டும் மகிழ்ந்தனா்.

காரைக்கால் கடற்கரைக்கு சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மக்கள் செல்லத் தொடங்கினா். அங்கு, சிறுவா்கள் பட்டம் விட்டும், விளையாண்டும் மகிழ்ச்சியோடு காணப்பட்டனா். பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் திரளான மக்கள் காரைக்கால் கடற்கரைக்கு வந்தனா். இதனால், கடற்கரையில் உள்ள சிறுவா் பூங்கா கூட்டதால் நிரம்பிவழிந்தது.

காரைக்கால் நகரின் பிரதான சாலையிலிருந்து சுமாா் ஒன்றரை கிலோ மீட்டா் நீளமுள்ள கடற்கரை சாலை முழுவதும் மக்கள் நடமாட்டம் மிகுதியாக இருந்தது. இருசக்கர வாகனங்கள், காா், வேன் உள்ளிட்டவை கடற்கரை சாலை முகப்பிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.

Advertisement

இதனால், கடற்கரைப் பகுதி ஆபத்து மிகுந்தது என ஒலிபெருக்கி வாயிலாக எச்சரித்த போலீஸாா், கடற்கரையோரத்திலிருந்து மக்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்துவந்த நிலையில், சனிக்கிழமை காலை முதல் மழையின்றி காணப்பட்டது, கடற்கரைக்கு வந்தோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.