முகப்பு
கரூர்

ஆக. 24-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கரூரில் ஆகஸ்ட் 24-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 12:51 pm IST
பகிர்:

கரூரில் ஆகஸ்ட் 24-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆர். துரைராஜ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், கரூர் டெக்ஸ்சிட்டி ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 24 (சனிக்கிழமை) கரூர் கௌரிபுரம் விரிவாக்கப்பகுதியிலுள்ள ரோட்டரி சங்க சமுதாயக் கூடத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

எட்டாம் வகுப்பு முதல் பட்டதாரி வரை படித்தவர்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், பயோ டேட்டா, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் முகாம் நடைபெறும் இடத்துக்கு காலை 9.30 மணிக்குள் வந்துவிட வேண்டும்.

முகாமில் பங்கேற்று பயன்பெறுவோரின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments