தீவிரவாத எதிர்ப்பு தின பேரணி
கரூர் மாவட்டம், அய்யர்மலையில் உள்ள குளித்தலை அரசு கலைக் கல்லூரியில் தீவிரவாத எதிர்ப்பு தின பேரணி செவ்வாய்க்கிழமை
கரூர் மாவட்டம், அய்யர்மலையில் உள்ள குளித்தலை அரசு கலைக் கல்லூரியில் தீவிரவாத எதிர்ப்பு தின பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற பேரணியை கல்லூரி முதல்வர் ந. செல்வராஜ் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணி, அய்யர்மலை பகுதிகளில் உள்ள தெருக்கள் வழியாகச் சென்று மீண்டும் கல்லூரியில் முடிவடைந்தது.
இதில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் எஸ். பத்மப்பிரியா, ஆர். மகேந்திரன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.