முகப்பு
கரூர்

பசுபதிபாளையம்- அமராவதி ஆறு இணைப்பு பாலப் பணியை தொடங்க காங்கிரஸ் வலியுறுத்தல்

கரூர் பசுபதிபாளையம்- அமராவதி ஆறு இணைப்புப் பாலப் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் கமிட்டி

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 12:51 pm IST
பகிர்:

கரூர் பசுபதிபாளையம்- அமராவதி ஆறு இணைப்புப் பாலப் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களை விவசாயப் பணிக்குப் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடகனாறு வாய்க்காலை தூர்வாரி பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவும், வெள்ளியணை குளத்தின் கரையை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

கரூரிலிருந்து திண்டுக்கல் வரை காலை, மாலை நேரங்களில் பயணிகள் ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். புலியூர் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டு சில வாரங்களிலேயே மூடப்பட்டுவிட்டது. எனவே மக்கள் நலன்கருதி இந்த புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பேங்க் கே. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நகரத் தலைவர்கள் சுப்பன், எஸ்.சி. அங்கமுத்து, வட்டாரத் தலைவர்கள் கே. வெள்ளக்கண்ணு, பி. கோபால், தமிழ்மணி, பி. கண்ணன் ஆகியோர் பேசினர்.

மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலர்கள் மனோகரன், நாகராஜன், கரூர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் எஸ். ஜெகதீóஸ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments