மணவாடியில் நல்லிணக்க நாள் விழா
கரூர் மாவட்ட நேரு யுவகேந்திரம் சார்பில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்பு
கரூர் மாவட்ட நேரு யுவகேந்திரம் சார்பில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்பு விழா மணவாடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மணவாடி ஆஸ்ரம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு ஊராட்சித் தலைவர் ஏ.பி.கே. லட்சுமி தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் ஜெ. ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட நேரு யுவகேந்திரத்தின் இளையோர் ஒருங்கிணைப்பாளர் பி. மயில்சாமி விழாவில் ராஜீவ் காந்தியின் படத்தைத் திறந்து வைத்து, நல்லிணக்க நாள் உறுதிமொழியை வாசித்தார். தொடர்ந்து விழாவில் அவர் பேசியது:
Advertisement
Advertisement
நாட்டின் இறையாண்மையைக் காக்க சாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்து இளைஞர்களும், மாணவர்களும் சகோதரத்துவம் காக்கப் பாடுபட வேண்டும். எதிர்கால இந்தியாவை வளமான, வலிமையான, வளர்ந்த நாடாக முன்னேற்ற இளைஞர்கள், மாணவர்கள் பாடுபட வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் அனைவரும் சமமாகப் பழக வேண்டும். மனிதநேயம் காக்க பாடுபட வேண்டும் என்றார் அவர்.
விழாவில், மதக் கோட்பாடுகள் குறித்து முகமது இஸ்மாயில், இந்திய செஞ்சிலுவைச் சங்க கரூர் மாவட்டத் துணைத் தலைவர் எம்.ஏ. ஜோசப் ஆகியோரும், ஜெ. வில்லியம்ஸ் ரத்த தானம், கண் தானம் குறித்தும் பேசினர்.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக சின்னதாளப்பட்டி பகத்சிங் இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் வி.கே. முருகேசன் வரவேற்றார். தாந்தோனி இளந்தென்றல் மகளிர் நற்பணி மன்றத் தலைவி கே. நிர்மலா நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.